You are currently browsing the category archive for the 'கவிதை' category.

மிகவும் அன்பானவள்
என் அம்மா
அப்பாவை தூர வைத்துவிட்டு
எனக்காக வாழுகிறாள்
எங்கு போனாலும்
தூக்கிச் செல்வாள்
இன்றும் அமர்ந்திருக்கிறேன்
அவள் இடுப்பில்
என் முகத்தை
வருடிச் செல்லும்
அவள் விட்ட
புகையில் முளைத்த
வளையம் சொல்லும்
என் அம்மா
மிகவும் அன்பானவள்.


லஞ்சப் புலம்பல்

அதைச் செய்வதற்காக
அமர்த்தப்பட்டிருந்தாலும்
அது உன் கடமையென்றாலும்
‘எனக்காக’ நீ செய்வதும்
அது கண்டு நான்
‘அன்புடன்’ கொடுப்பதும்
உன்னைக் காட்டி
என்னைக் காட்டி
நம் பின்னே
ஆட்டுக் கூட்டமே வந்தாலும்
இன்னும் சிலர் மட்டும்
இதை லஞ்சம் என்றே
புலம்புகின்றனர்
என்ன செய்ய?

—————————————–

நகலாளர்கள்

சாப்பிடத் தெரிந்த
எல்லோருக்கும்
சமைக்கத்தெரியாது
சுயமாய் சுவையாய் சமைப்பவர் சிலர்
பார்த்து சமைப்பவர் மேலும் சிலர்
காரம் கூடியும்
உப்பு குரைந்தும்
சுமாராய் சமைக்கும் மற்றும் பலர்
இவர்களால்
உண்ணுவோருக்கு ஊறேதுமில்லை
சமைத்தவனிருக்க
தான் சமைத்ததாகக்
கூறும் கூட்டமிருக்கிறதே
அது ஆபத்தானது
உண்ணுவோர் கவனிக்க.

——————————————–

சும்மாக் கவிதை

அடிக்கடி பார்க்கிறவரை
அகஸ்மாத்தான் இடத்தில்
கண்டபோது
‘எங்கே இந்த்ப்பக்கம்’ என்றாய்ந்த போது
- சும்மா என்றார்.
தபாலாபிஸில் கண்டவர்
சும்மா தெரிந்தவருக்கு
கடிதமெழுதுவதாகவும்
பஸ்ஸில் கண்டவர்
சும்மா கடைக்குப் போவதாகவும்
கோவிலில் கண்டவர்
சும்மா கும்பிட வந்தாகவும்
தியேட்டரில் கண்டவர்
சும்மா படம் பார்க்க வந்ததாகவும்
ஹோட்டலில் கண்டவர்
சும்மா சாப்பிட வந்ததாகவும்
இப்படி பல பேர்
சும்மா எடையெதையோ செய்ய
நானும் சும்மா இப்படி..