எத்தனை காலம் ஆகும் மனிதனை மனிதன் மதிகக…
சென்ற வார இறுதியில் நானும் என் மனைவியும் வழக்கம் போல மாலை நடை அதாவது வாக்கிங் சென்று கொண்டிருந்தோம். அப்போது ஒரு வீட்டின் முன்னால் சுமார் பத்து பன்னிரெண்டு இளம் வாலிபர்கள் (வய்து 18-20 இருக்கும்) கோடையை கும்மாளமாக கொண்டாடிக்கொண்டிருந்தனர். அனைவரும் பக்கீயா என இங்கு குறிப்பிடப்படும் ஐரோப்பியர்கள். கைகளில் கோப்பைகள், புட்டிகள். நாங்கள் அந்த வீட்டை கடந்து போகையில் சில கூக்குரல்கல் தனிப்பட்டு கேட்டது அது எங்களை நோக்கி என்பது புரிந்தது. நாங்கள் அதற்கு எந்த எதிர்வினையும் காட்டாது கடந்து போய்க்கொண்டிருந்தோம். அப்போது எங்கள் பின்னே,கால்களின் மிக அருகே, ஒரு பாட்டில் உடைந்து சிதறியது. நான் நின்று திரும்பிப் பார்த்தேன். அதை எரிந்தவனிடம் ஒரே மந்தகாசம், மேலும் சில சங்கேத ஏக்காளிப்புகள். அதில் இருவர் எங்களை போய்விடுமாறு கூறினர். நான் என்னவென்று கேட்டுவிடலாம் என்று போக இருந்தனவை என் மனைவி , ‘குடிகாரப் பசங்கள், பேசாமல் வாங்க போகலாம் வம்பு வேண்டாம்’ எனறு பிடித்து இழுத்துச் சென்றுவிட்டாள். மனதில் என்னெனவோ எண்ண ஓட்டம்.
இப்படியும் தோண்றியது. நாங்கள் பேசாமல் சென்றபின் அவர்கள் நினைத்திருப்பார்கள் “இவன் ரொம்ப நல்லவன்டா. என்ன செஞ்சாலும் தாங்கிக்கிரான்”.
இதை எப்படி எடுத்துக்கொள்வது? ஒரு மாஸ் ஹிஸ்டீரியா என்றா, இல்லை இளவயதில் (adolescent) ஏற்படும் ஒரு அகந்தையினாலா, இல்லை இன வேறு பாட்டினாலா? முதல் இரண்டும் இருக்கலாம் அது சாதாரணம். ஆனால் எங்களுக்கு நடந்தது மூறாவதுதான் என எனக்கு தோன்றியது ஏன் என்றால், நாங்கள் போன திசைக்கு எதிர் திசையில் இரண்டு பக்கீயாக்கள் அதே கூட்டத்தை கடந்து வந்த போது அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆக எங்களைக் கண்டதும் வேறு எதையோ கண்டதுபோல குஷியாகிவிட்டது கூட்டம். நான் அவர்களிடம் கேட்க்க நினத்தது,
“எங்களைப் பார்த்தால் நாய் மாதிரி உங்களுக்கு தெரிந்தால், எங்களுக்கு இப்போது உங்களை பார்க்கும் போது கரப்பான் பூச்சி மாதிரி தெரிகிரது, ஆனாலும் நாங்கள் உங்கள் மீது மருந்தடிக்கவில்லை, ஒரு நாள் நீங்களும் வளர்ந்து நாயாகும் போது புரிந்துவிடுமென்று” அதற்கும் அவர்களிடமிருந்து ஏதாவது பதில் அல்லது மேலும் ஒரு புட்டி வந்து விழுந்தால் உடைந்த அந்த புட்டியை எடுத்து என்னுடைய நெற்றியில் லேசாக ஒரு கீறு போட்டுக்கொண்டு, 111 அல்லது போலீசுக்கு போன் போட்டு ஒட்டுமொத்தமாக மாட்டிவிடலாம் என்றெல்லாம் பிளான் போட்டுக்கொண்டிருந்தேன் ஆனால் மனைவி இழுத்து வந்துவிட்டாள்.
இனி ஃப்ளாஷ்பேக். மதுரை, பழங்காநத்தம் பைபாஸ் பாலத்தின் பக்க சுவர்களில் அமர்ந்து கொண்டு நண்பர்களுடன் போகிற வருகிற பெண்களை லந்து பண்ணுவதும் அதை பொற்றுக்காது லுக்விட்டு செல்லும் சில பெரிசுகளை லொள்ளு பண்ணியதும் மனதில ஒளிசொடுக்கியது. நாமும் இதனை கடந்துதான் வந்துள்ளோம். நங்கள் செய்ததற்கும் இங்கு நியுஸியில் நடந்ததற்கும் என்ன பெரிய வித்தாசம்? நிறமும் இனமுமா? இல்லை பருவமா?
அலசிப்பார்த்தால் மனிதன் இயற்கையாக நல்லவனா கெட்டவனா (நாயகன் ஷ்டைலில்) என்ற மதங்கள் மற்றும் தத்துவங்களின் சரித்திரம் வாய்ந்த வாதத்துக்கு வந்து நின்றது. இயற்கை, மனிதனும் உள்பட,கண்காணிப்பில்லை என்றால் நம்பமுடியாது போய்விடும் என்கிறது யூதர்களின் தோரா. இது பற்றி எழுத்தாளர்/பேச்சாளர் தீபக் சோப்ரா இடம் பெற்ற JTN தொலைக்காட்சி தொகுப்பு இங்கு.
அதில் இடம் தீபக் குறிபிட்ட உருது கவிஞர் ரூமியின் கவிதை:
நான் முட்டாள்தனத்தின்
உதடுகளில் வாழ்ந்திருந்தேன்
காரணத்தை அறிய விரும்பி
கதவுகளை தட்டினேன்
கடைசியில் கதவுகள் திறந்தன
நான் உள்ளிருந்தே
தட்டிக்கொண்டிருந்திருக்கிறேன்

2 comments
Comments feed for this article
11 ஜூன், 2007 இல் 3:59 மு.பகல்
balamgn
Every event is reflecting something and try to explain to us. But we are closed all the doores and living inside the darkenss.
11 ஜூன், 2007 இல் 3:59 மு.பகல்
noviceAathmi
This happens all the time all over the world.