You are currently browsing the monthly archive for மார்ச், 2007.
எத்தனை காலம் ஆகும் மனிதனை மனிதன் மதிகக…
சென்ற வார இறுதியில் நானும் என் மனைவியும் வழக்கம் போல மாலை நடை அதாவது வாக்கிங் சென்று கொண்டிருந்தோம். அப்போது ஒரு வீட்டின் முன்னால் சுமார் பத்து பன்னிரெண்டு இளம் வாலிபர்கள் (வய்து 18-20 இருக்கும்) கோடையை கும்மாளமாக கொண்டாடிக்கொண்டிருந்தனர். அனைவரும் பக்கீயா என இங்கு குறிப்பிடப்படும் ஐரோப்பியர்கள். கைகளில் கோப்பைகள், புட்டிகள். நாங்கள் அந்த வீட்டை கடந்து போகையில் சில கூக்குரல்கல் தனிப்பட்டு கேட்டது அது எங்களை நோக்கி என்பது புரிந்தது. நாங்கள் அதற்கு எந்த எதிர்வினையும் காட்டாது கடந்து போய்க்கொண்டிருந்தோம். அப்போது எங்கள் பின்னே,கால்களின் மிக அருகே, ஒரு பாட்டில் உடைந்து சிதறியது. நான் நின்று திரும்பிப் பார்த்தேன். அதை எரிந்தவனிடம் ஒரே மந்தகாசம், மேலும் சில சங்கேத ஏக்காளிப்புகள். அதில் இருவர் எங்களை போய்விடுமாறு கூறினர். நான் என்னவென்று கேட்டுவிடலாம் என்று போக இருந்தனவை என் மனைவி , ‘குடிகாரப் பசங்கள், பேசாமல் வாங்க போகலாம் வம்பு வேண்டாம்’ எனறு பிடித்து இழுத்துச் சென்றுவிட்டாள். மனதில் என்னெனவோ எண்ண ஓட்டம்.
இப்படியும் தோண்றியது. நாங்கள் பேசாமல் சென்றபின் அவர்கள் நினைத்திருப்பார்கள் “இவன் ரொம்ப நல்லவன்டா. என்ன செஞ்சாலும் தாங்கிக்கிரான்”.
இதை எப்படி எடுத்துக்கொள்வது? ஒரு மாஸ் ஹிஸ்டீரியா என்றா, இல்லை இளவயதில் (adolescent) ஏற்படும் ஒரு அகந்தையினாலா, இல்லை இன வேறு பாட்டினாலா? முதல் இரண்டும் இருக்கலாம் அது சாதாரணம். ஆனால் எங்களுக்கு நடந்தது மூறாவதுதான் என எனக்கு தோன்றியது ஏன் என்றால், நாங்கள் போன திசைக்கு எதிர் திசையில் இரண்டு பக்கீயாக்கள் அதே கூட்டத்தை கடந்து வந்த போது அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆக எங்களைக் கண்டதும் வேறு எதையோ கண்டதுபோல குஷியாகிவிட்டது கூட்டம். நான் அவர்களிடம் கேட்க்க நினத்தது,
“எங்களைப் பார்த்தால் நாய் மாதிரி உங்களுக்கு தெரிந்தால், எங்களுக்கு இப்போது உங்களை பார்க்கும் போது கரப்பான் பூச்சி மாதிரி தெரிகிரது, ஆனாலும் நாங்கள் உங்கள் மீது மருந்தடிக்கவில்லை, ஒரு நாள் நீங்களும் வளர்ந்து நாயாகும் போது புரிந்துவிடுமென்று” அதற்கும் அவர்களிடமிருந்து ஏதாவது பதில் அல்லது மேலும் ஒரு புட்டி வந்து விழுந்தால் உடைந்த அந்த புட்டியை எடுத்து என்னுடைய நெற்றியில் லேசாக ஒரு கீறு போட்டுக்கொண்டு, 111 அல்லது போலீசுக்கு போன் போட்டு ஒட்டுமொத்தமாக மாட்டிவிடலாம் என்றெல்லாம் பிளான் போட்டுக்கொண்டிருந்தேன் ஆனால் மனைவி இழுத்து வந்துவிட்டாள்.
இனி ஃப்ளாஷ்பேக். மதுரை, பழங்காநத்தம் பைபாஸ் பாலத்தின் பக்க சுவர்களில் அமர்ந்து கொண்டு நண்பர்களுடன் போகிற வருகிற பெண்களை லந்து பண்ணுவதும் அதை பொற்றுக்காது லுக்விட்டு செல்லும் சில பெரிசுகளை லொள்ளு பண்ணியதும் மனதில ஒளிசொடுக்கியது. நாமும் இதனை கடந்துதான் வந்துள்ளோம். நங்கள் செய்ததற்கும் இங்கு நியுஸியில் நடந்ததற்கும் என்ன பெரிய வித்தாசம்? நிறமும் இனமுமா? இல்லை பருவமா?
அலசிப்பார்த்தால் மனிதன் இயற்கையாக நல்லவனா கெட்டவனா (நாயகன் ஷ்டைலில்) என்ற மதங்கள் மற்றும் தத்துவங்களின் சரித்திரம் வாய்ந்த வாதத்துக்கு வந்து நின்றது. இயற்கை, மனிதனும் உள்பட,கண்காணிப்பில்லை என்றால் நம்பமுடியாது போய்விடும் என்கிறது யூதர்களின் தோரா. இது பற்றி எழுத்தாளர்/பேச்சாளர் தீபக் சோப்ரா இடம் பெற்ற JTN தொலைக்காட்சி தொகுப்பு இங்கு.
அதில் இடம் தீபக் குறிபிட்ட உருது கவிஞர் ரூமியின் கவிதை:
நான் முட்டாள்தனத்தின்
உதடுகளில் வாழ்ந்திருந்தேன்
காரணத்தை அறிய விரும்பி
கதவுகளை தட்டினேன்
கடைசியில் கதவுகள் திறந்தன
நான் உள்ளிருந்தே
தட்டிக்கொண்டிருந்திருக்கிறேன்
குருவுக்கு தட்சணை கொடுக்க வேண்டும் என்பது நமது பாரம்பரியம். உதாரணத்துக்கு ஏகலைவன். சொல்லிக்கொடுத்த வாத்தியாருக்கு குருதட்சணை குடுக்கவில்லை என்றால் அவர் சொல்லிக்கொடுத்தது உதவாது என்பதும் ஒரு வகை நம்பிக்கை. இது ஒரு சர்வீஸ் ஃபி மாதிரி என்றாலும் குருவுக்கு உரிய தானம் என அதை ஒரு உயர்ந்த இடத்தில் வைக்கிறோம். காலப்போக்கில் இதுவே கற்பது பள்ளி கல்லூரி என ஆகியவிட்டதால் (fees) கட்டணம் என மாறிவிட்டது. நம்ம ஊர்ல பள்ளிக்கூடத்துல ஃபீஸ் கட்டலேன்னா, பையனையோ பொண்ணையோ, . ஃபீஸ் கட்டினா உள்ள வா இல்லேன்னா போய்ட்டுவான்னு வீட்டுக்கு அனுப்பிச்சுருவாங்க. இதை நாம சகஜமா எடுத்துட்டு அது சரிதானே ஃபீஸ் கட்டாம புள்ளய எப்படி சேர்த்துகறதாம்னு ஞாயமா தோணும். ஆனா இங்க நிஸில் ஒரு ப்ரைமரி ஸ்கூல்லையும் இத மாதிரி நடந்தது. விஷயத்த மேல சொல்லரதுக்கு முன்னாடி இங்க ப்ரைமரி ஸ்கூல் பின்னனிய பாக்கனும். ஒரு பத்து பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஃபீஸெல்லாம் கிடையாது. எல்லாம் அரசாங்க செலவு. ஆனா பின்னாடி ஜனத்தொகை கொஞ்சம் பெருகினப்புறம் கட்டுப்பிடி ஆகாததுனால வாத்தியார் சம்பளம் போக மத்த இதர செலவுகள அந்தந்த பள்ளிக்கூடங்கள் பாத்துக்க வேண்டியதுன்னு ஆகிப்போச்சு. அதனால பள்ளிகள் பெற்றோரிடமிருந்து நன்கொடை கேட்டு அனுப்புவார்கள். இங்க கவனிக்க வேண்டியது “நன்கொடை” என்பதை. அதவாது ஏதோ முடிஞ்சவங்க குடுத்தா சரி. இது இன்னமும் வழக்கில் உள்ளது. ஒரு வருடம் முழுவதற்கும் மிகக்குறைந்த தொகையே. முக்கால்வாசி பெற்றோர் கொடுத்துவிடுவார்கள். மீதி கால்வாசி கொடுக்க மாட்டார்கள். எத்தனை முறை கடிதமனுப்பினாலும் ஒன்றும் பெயராது. சமீபத்தில் இப்படி ஒரு ஸ்கூலில் நடந்த போது சம்பந்தப்பட்ட அந்த மாணவரை வீட்டுக்கு அனுப்பினார்கள். அவ்வளவுதான் ஒரு கூட்டம் கூட்டி அது எப்படி அந்த மாணவரை தண்டிக்கலாம் என்று ஒருவித கண்டனப்போராட்டமாகிவிட்டது. காரணம் , ஃபீஸ்/நன்கொடை கட்டாதது மாணவரின் குற்றம் அல்ல அது பெற்றோரின் குற்றம். அப்படியிருக்க அந்த மாணவரை தண்டித்தது சரியல்ல என்பதே. இது கவணிக்க வேண்டிய ஒரு மாற்றுக் கோணம். இந்த விஷயத்தில் குழந்தையை தண்டிப்பது சரியா? போராடியவர்கள் கூறியது ஃபீஸ் கட்ட வைப்பதை அந்த பெற்றோருடன் பேசி தீர்வு காணவேண்டுமெயொழிய அந்த மாணவரை பள்ளியில் சேர்த்துக்கொண்டுதானாக வேண்டும் என்று. அப்படியே நடந்தது. மாணவரை மீண்டும் சேர்த்துக் கொண்டனர், ஆனால் பெற்றோர் ஃபீஸ் கட்டினார்களா என தெரியவில்லை. நம்ம ஊர்ல இதுபோல் சாத்தியமா? இப்படி இருந்தால் எல்லோருக்கும் கல்வி என்பது சற்று எளிதாகும்.
ரசிகன் என்று வரும்போது உலகத்தில் எந்த நாடாக இருந்தாலும் ஒரே மாதிரிதான் உள்ளது. அடுத்த மாதம் ஆக்லேண்டில் நடக்கவிருக்கும் Red Hot Chili Peppersன் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை இன்று அதிகாலை தொடங்கியது. அதற்காக சனிக்கிழமை நள்ளிரவு 2.30 மணியிலிருந்து அதாவது 24 மணிநேரத்துக்கும் அதிகமா வரிசையில் காத்திருந்தனர். இதில் வாசையில் தூங்கிக்கொண்டிருந்த ஒருவர் மீது காரை இடித்து சென்று விட்டனர். இன்னும் யாரென்று கண்டுபிக்கவில்லை. நான் இதனை தட்டச்சிக்கொண்டு இடையில் செய்தியை சென்று பார்த்தால் அடிபட்டவர் இறந்துவிட்டதாக செய்தி சொல்கிறது. மிக அதிர்ச்சியாக இருக்கிறது. இதைப் பார்க்கும் போது, கையில் கற்பூரமேற்றுவதும், பாலாபிஷேகம் செய்வதும், இன்னும் ஒருபடி மேலே சென்று கோவில் கட்டுவதும் உயிரை விடுவதைவிட மேலானது. வாழ்க ரசிகர் மன்றம்.

அண்மைய மறுமொழிகள்