You are currently browsing the daily archive for ஏப்ரல் 11th, 2005.
மிகச்சில ஆத்மாக்கள் தப்பிப்போகும்
இந்நிலை ஒரு தவம்
அகமிழுத்த இழுப்புக்கு ஆடிய
புறம் புலம்பும் தருணம்.
கர்வம் ஆட்டுவித்த பொம்மலாட்டத்தை
அடக்கவோ இன்னும் ஆடவோ
முடியாமல் தடுமாறும் கணம்.
அனுபவத்தை ஆசானாக்கி
ஏன் வந்தோம் எங்கு போகிறோம்
என்ற பிரக்ஞை வாய்த்தோர்
பயணம் எளிது;
குறுக்காக விரும்பியதை அடைந்துவிட
பாதயை தொலைத்துவிட்டு
பயணம் மட்டும் மேற்க்கொள்ள
வந்த மற்றோர்
புவியில் பாரமே;
இருப்பினும் நளைக்கும்
நானிருப்பேன் என்ற மெல்லிய
நுலிழையில் நிராசைகளை
மாலையாக்கி சூடிகொண்டுவிட
தினமும் துடிக்குது ஆவி.

அண்மைய மறுமொழிகள்